Wednesday 31 October 2018

வீட்டில் செல்வம் பெருக... நமது வீட்டில் செல்வமும், சந்தோஷமும் எப்பொழுதும் நிலைத்திருக்க...

நமது வீட்டில் செல்வமும், சந்தோஷமும் எப்பொழுதும் நிலைத்திருக்க நாம் செய்ய வேண்டிய மிகச்சிறந்த பூஜை குபேர லக்ஷ்மி பூஜையாகும். இந்த பூஜையை செய்வதன் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும்,மகாலட்சுமியின் அருளையும் ஒன்று சேர பெறமுடியும். மிக மிக எளிதான இந்த பூஜையை செய்வதனால் கிடைக்கும் பழங்கள் மிக மிக பெரியதாகும். இந்த குபேர லட்சுமி பூஜையை எப்படி செய்வதென்று பார்ப்போம் வாருங்கள்.
இந்த பூஜையை செய்ய நாம் இரண்டு நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதாவது இந்த பூஜையை ஒன்பது வாரங்களோ, அல்லது ஒன்பது மாதங்களோ ஒரே நாட்களில் செய்யப்பட வேண்டும் எனவே இதை செய்ய நாம் சரியான நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது ஒன்பது வாரங்கள் செய்ய போகிறோம் என்றால் வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யலாம், அல்லது ஒன்பது மாதங்கள் செய்ய போகிறோம் என்றால் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாட்களிலோ அல்லது அமாவாசை நாட்களிலோ இதை செய்யலாம். இந்த பூஜையை ஒருவரே தான் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆண், பெண் என எவர் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். ஒருவேளை அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் அந்த குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம்.
இரண்டாவது நிபந்தனை இதை செய்ய ஒரே மாதிரியான நாணயங்கள் 81 எடுத்துக்கொள்ள வேண்டும் அந்த நாணயங்கள் ஒரு ரூபாயாகவோ அல்லது வேறு எந்த நாணயமாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அந்த 81 நாணயங்களும் ஒரே மதிப்பிலானவையாக இருக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினம் என நீங்கள் பூஜை செய்யத் தேர்வு செய்த நாளில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள்.
பூஜை எந்தவித தடையும் இல்லாமல் நடைபெறவும், வீட்டில் செல்வம் சேரவும் முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபடுங்கள்.
அந்த நாளில் நல்ல நேரத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு பலகையின் மீது முன்பக்கம் படத்தில் தரப்பட்டிருப்பது போன்று ஒரு கட்டத்தை குங்குமத்தால் வரைந்துக்கொள்ளுங்கள், எண்களை அரிசி மாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “ஸ்ரீ’ எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம்.

இதுவே குபேர யந்திரக் கோலம். அடுத்து, கட்டங்களில் எழுதப்பட்டுள்ளது எழுத்துக்களுக்குப் பக்கத்தில் கட்டத்திற்கு ஒன்று வீதம் ஒன்பது நாணயங்களை வையுங்கள். எழுத்தை அழித்தோ, மறைத்தோ வைக்கக்கூடாது. எனவே யந்திரத்தை வரையும் போதே அதற்கு ஏற்றபடி வரைந்து கொள்ளுங்கள்.
நாணயம் மகாலட்சுமிக்கு அடையாளம் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம்.
இனி, லட்சுமி குபேர் யந்திரத்தை நீங்கள் பூஜிக்க கொஞ்சம் உதிரி பூக்களை யுடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
யந்திரத்தின் முன் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஒன்றினை ஏற்றிவையுங்கள்.
“தாயே மகாலட்சுமி, மனதார உன்னை வணங்கும் எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருக வேண்டும். மங்காத செல்வம் சேரவேண்டும். என்றென்றும் உன்னரும் நீங்காது இருக்க வேண்டும்!’ என்று மனதார வேண்டுங்கள்.

மகாலட்சுமியே போற்றி!
மங்கள லட்சுமியே போற்றி!
தீபலட்சுமியே போற்றி!
திருமகள் தாயே போற்றி!
அன்னலட்சுமியே போற்றி!
கிருக லட்சுமியே போற்றி!
நாரண லட்சுமியே போற்றி!
நாயகி லட்சுமியே போற்றி!
ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி!

என்று சொன்னவாறே சிறிய பூவை நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போடுங்கள்.
வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி!
செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி!
உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி!
இந்தத் துதியைச் சொல்லி குபேரனைக் கும்பிடுங்கள்.தூப, தீபம் காட்டுங்கள். சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசம் நிவேதனம் செய்யுங்கள்.அவ்வளவுதான். பூஜை செய்தாயிற்று. அன்று மாலை உங்களால் இயன்ற அளவுக்கு மங்களப் பொருள்களை பிறருக்கு வைத்துக் கொடுங்கள். வசதி குறைவாக இருப்பின் இதனை ஒன்பதாவது வார முடிவில் தந்தாலும் போதும்.
பூஜை செய்த அன்று மாலை ஏதாவதொரு பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை தரிசியுங்கள். மறுநாள், குபேர யந்திரத்தில் வைத்து பூஜித்த காசுகளை எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். ஒரு துணியை நனைத்து அதனால் குபேர யந்திரக் கோலத்தைத் துடைத்து விடுங்கள்.
அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாளில் முன்புபோலவே குபேர யந்திரம் வரைந்து வேறு காசுகளை வைத்து பூஜித்து, மாலையில் கோயிலுக்குச் செல்வதுவரை எல்லாவற்றையும் செய்யுங்கள்.
இப்படி ஒன்பது வெள்ளிக்கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமிகள் பூஜை செய்து முடித்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று, சேர்ந்திருக்கும் எண்பத்தொரு காசுகளையும் எடுத்துக் கொண்டு சென்று ஏதாவது ஒரு சிவன் கோயில் உண்டியலிலோ அல்லது பெருமாள் கோயிலில் தாயார் சன்னதியில் உள்ள உண்டியலிலோ செலுத்துங்கள். சிவபெருமானே குபேரனுக்கு எல்லா செல்வஙகளையும் அளித்தவர். அதோடு அவரை நண்பனாகவும் ஏற்றவர். எனவே சிவன் கோயிலில் செலுத்துவது சிறந்ததாகும்.
அன்றையதினம் உங்களால் இயன்ற அளவு மங்களப் பொருட்களை பெண்களுக் வைத்துக் கொடுங்கள். அன்றைய தினம் மகாலட்சுமியே ஏதாவது ஒரு உருவில் அதனை பெற வருவாள் என்பது நம்பிக்கை. எனவே, குறைவாகக் கொடுத்தாலும் மனதாரக் கொடுங்கள்.ஒன்பதாவது வார (மாத) பூஜை முடிந்த நாள் முதல் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வவளம் சேரும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும். வருடத்துக்கு ஒருமுறை இந்த லட்சுமி குபேர யந்திர பூஜையைச் செய்யுங்கள். குறையாத செல்வதும், நிறைவான நிம்மதியான வாழ்வும் நிச்சயம் கிட்டும்.


Sri Maha Yohini Sathru Samkara Beedam
SRI LA SRI ARULMOZHI AMMA
Mannargudi.


To Contact Asramam: +91-7845458791
Watsapp: +91-9688876966

*Appointments only on Saturday and Sunday

No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...